அம்பாறை மாவட்ட செயலகத்தில் வெள்ள நீரினால் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 1, 2020

அம்பாறை மாவட்ட செயலகத்தில் வெள்ள நீரினால் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு...


மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து  நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு   அம்பாறை மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள்  அம்பாறை   மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று  நற்பிட்டிமுனை கிட்டங்கி  நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள்  முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விடயம்  தொடர்பான நிகழ்வு அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் இன்று மாலை  இடம்பெற்றதுடன் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் உள்ளிட்ட தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அத்துடன்  விவசாய அமைப்பு பிரதிநிதிகளும்   கருத்துப் பரிமாறி தீர்வொன்றை பெற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில்  அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் வீ.ஜெகதீஸன் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர்    சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.