யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் உயிலங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயனித்த சொகுசு வாகனம் ஒன்றை பரயநாளங்குளம் சந்தியில் உள்ள சோதனைச்சாவடியில் பொலிஸார் வழி மறித்த போது வாகனத்தில் சூட்சகரமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் அதன் சாரதியையும் பொலிஸார் கைது செய்தனர்.
வாகன சாரதி யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 2 கோடியே 40 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் ஆலோசனைக்க அமைய பரயநாளன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் ராஜபக்ஷவின் தலைமையில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment