மாணவர்களான ரவிக்குமார் யதுர்ஜிகா, ரமணன் றஷானி, குணாளன் யதுர்மிஷா, ஜிவாகரன் டிலுக்ஷன் ஆகிய நான்கு புலமையாளர்கள் துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஜக்கியஇராச்சியத்தின் சிறுவர் வறுமை ஒழிப்பு நிதியத்தின்() நிதியுதவியில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் ஸ்ரீலங்கா () அமைப்பு இதனை வழங்கிவைத்தது.
இந்த நிகழ்வு கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.கிருபைராஜா தலைமையில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.
புனர்வாழ்வும் புதுவாழ்வும் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ், திருமதி ஆனந்தி ஹென்றிஅமல்ராஜ் ஆகியோர் கௌரவஅதிதிகளாகக்கலந்துகொண்டனர்.
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துசிறப்பித்தார்.சிறப்பதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் ,கோட்டக்கல்விப்பணிப்பாளர் எ.சபூர்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரத்தியேகவகுப்போ ஏனைய வசதிகளோ இல்லாத மிகவும் பின்தங்கிய இப்பிரதேசத்தில் ,இந்தமாணவர்களைப்பயிற்றுவித்த வகுப்பாசிரியை திருமதி விஜயலதா இராமச்சந்திரன் அதிதிகளாலும் பெற்றோராலும் வெகுவாகப் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment