ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று (17) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையில் இடம்பெறவுள்ள முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.
No comments:
Post a Comment