ரஷ்யாவில் அவசரகால நிலையை அறிவித்தார்...ஜனாதிபதி விளாடிமிர் புடின்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 4, 2020

ரஷ்யாவில் அவசரகால நிலையை அறிவித்தார்...ஜனாதிபதி விளாடிமிர் புடின்!



ஆர்க்டிக் வட்டத்திற்குள் ஒரு ஆற்றில் 20,000 டன் டீசல் எண்ணெய் கசிந்ததை அடுத்து ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

சைபீரிய நகரமான நோரில்ஸ்க் அருகே ஒரு மின் நிலையத்தில் எரிபொருள் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் இந்த கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் அறிந்ததை கண்டுபிடித்த ஜனாதிபதி புடின் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த ஆலையானது உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
இந்த ஆலையானது உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

குறித்த விவகாரம் அரசு அதிகாரிகளின் பார்வைக்கு ஏன் தாமதமாக கொண்டு செல்லப்பட்டது என கேள்வின் எழுப்பிய புடின்,

சமூக ஊடகங்களிலிருந்து இதுபோன்ற அவசரகால சூழ்நிலைகள் தொடர்பில் நாம் அறியப் போகிறோமா என அந்த ஆலையின் தலைவர் செர்ஜி லிபினை கடிந்து கொண்டுள்ளார்.ஆற்றில் கசிந்துள்ள அந்த 20,000 டன் டீசல் எண்ணெயானது தற்போது 350 சதுர கி.மீற்றர் அளவுக்கு பரவியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு புடின் உத்தரவிட்டுள்ளார், மேலும் மின் நிலையத்தில் மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.a

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.