மெக்சிகோவில் ஒரே நாளில் 1092 பேர் பலி! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 4, 2020

மெக்சிகோவில் ஒரே நாளில் 1092 பேர் பலி!




மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1092 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்துள்ளதுடன்

3.87 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ 14வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1092 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் ஒரே நாளில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருப்பது இது முதல் முறையாகும்.

முந்தைய நாளில் 470 பேர் மட்டுமே பலியான நிலையில், தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மொத்த பலி எண்ணிக்கை 11729 ஆக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.