சிங்கப்பூரில் ஜூன் 1ஆம் தேதி வரை 408,000-க்கும் மேற்பட்ட COVID-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
அதன் மூலம் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 71,700 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் பதிலளித்தார்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டநாள் அனுமதி அட்டையில் உள்ளவர்கள் என சமூக அளவில் 202,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 37,500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
வரும் மாதங்களில் சிங்கப்பூர் ஒரு நாளைக்கு 40,000 பரிசோதனைகள் நடத்தத் தயாராகி வருவதாக அமைச்சர் கான் தெரிவித்தார்.சமூக அளவில் அதிகமான பரிசோதனைகளை நடத்துவதால் கிருமித்தொற்று இடங்களை எளிதில் கண்டறிந்து தடுக்கலாம் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment