15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் .. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, July 7, 2020

15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..


கிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap)  திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.




இவ் இளம் கலைஞர் முகப்புத்தகம் வாயிலாக பல்வேறு சொல்லிசை பாடல்களை பாடி தனது திறமையை ஓரளவுக்கு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.இவருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக   "கலகமானிடா" எனும் பாடல் கிடைத்தது.அது கடந்த 4 நாட்கள் முன் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.அதில் சோபிதன் அவரே வரிகள் எழுதி பாடலை பாடியிருந்தார்.

இப்பாடல் இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட ஈழத்து பாடலாகும் ..இதற்கு இசையமைப்பு ஹுமாபிரியன் ,ஒளித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பை சஜித் அவர்களும் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.மேலும் இப்பாடல் இவர் உட்பட துலக்சன்,சதுர்சன்,பரவிந்தன்,தசானந், எனும் ஐவறினால் எழுதப்பட்டு அவர்களினாலேயே பாடப்பட்டது ஒரு சிறப்பம்சமாகும். அந்த பாடல் கீழே காணப்படுகின்றது.



No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.