கிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இவ் இளம் கலைஞர் முகப்புத்தகம் வாயிலாக பல்வேறு சொல்லிசை பாடல்களை பாடி தனது திறமையை ஓரளவுக்கு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.இவருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக "கலகமானிடா" எனும் பாடல் கிடைத்தது.அது கடந்த 4 நாட்கள் முன் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.அதில் சோபிதன் அவரே வரிகள் எழுதி பாடலை பாடியிருந்தார்.
இப்பாடல் இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட ஈழத்து பாடலாகும் ..இதற்கு இசையமைப்பு ஹுமாபிரியன் ,ஒளித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பை சஜித் அவர்களும் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.மேலும் இப்பாடல் இவர் உட்பட துலக்சன்,சதுர்சன்,பரவிந்தன்,தசானந், எனும் ஐவறினால் எழுதப்பட்டு அவர்களினாலேயே பாடப்பட்டது ஒரு சிறப்பம்சமாகும். அந்த பாடல் கீழே காணப்படுகின்றது.
No comments:
Post a Comment