இலங்கைகல்விவரலாற்றில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை பிரகடனம் வெளியானது! 1ம்திகதிய அதிவிசேட வர்த்தமானிமானி மூலம் 4471பேர் தெரிவாவர். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 6, 2020

இலங்கைகல்விவரலாற்றில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை பிரகடனம் வெளியானது! 1ம்திகதிய அதிவிசேட வர்த்தமானிமானி மூலம் 4471பேர் தெரிவாவர்.


இலங்கைக்கல்வித்துறை வரலாற்றில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த 'இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ' எனும் புதியசேவை புதிதாக உதயமாகியுள்ளது.

இபபுதிய சேவை கடந்த யூலைமாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

கல்வித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட இச்சேவைக்கான அறிவித்தல் அரசாங்கசேவை ஆணைக்குழுவினால் கடந்த யூலைமாதம் 1ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானியில் 16பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கசேவை ஆணைக்குழுவினால் 2019.08.22அம் திகதி அனுமதிக்கப்பட்ட இலங்கைஆசிரிய சேவைப்பிரமாணக்குறிப்பு இவ்வர்த்தமானிப்பிரகடனத்தில் வெளியிடப்பட்டள்ளது.

இலங்கைக்கல்வித்துறையில் இதுவரை இருந்துவரும் இலங்கை கல்வி நிருவாகசேவை இலங்கை ஆசிரிய கல்வியிலாளர்சேவை இலங்கை அதிபர் சேவை இலங்கை ஆசிரியர்சேவை என்பவற்றுக்கு அப்பால் புதிதாக இச்சேவை கல்விப்பரப்பிற்குள் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சேவைக்காக முதற்கட்டமாக 4471 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இவர்களில் 3188பேர் சிங்களமொழிமூலமும் 1283பேர் தமிழ்மொழி மூலமும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். நாடளாவியரீதியில் தெரிவாகவுள்ள  1283 தமிழ்மொழி ஆசிரியஆலோசகர்களுள் வடமாகாணத்தில் 377பேரும் கிழக்குமாகாணத்தில் 370பேரும் தெரிவாவர்.இந்த 4471 பேரில் பெரும்பான்மையாக 1358பேர் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்களாகத் தெரிவாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கென தற்சமயம் கடமையாற்றும் கடமைநிறைவேற்று ஆசிரியர்ஆலோசகர்கள் பல்வேறு போராட்டங்களை கடந்த காலங்களில் நடாத்திவந்துள்ளமை தெரிந்ததே.

இச்சேவைக்கு நாடளாவியரீதியில் 4471சேவையிலுள்ள ஆசிரியர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர். இப்புதியசேவையில் வகுப்பு2 வகுப்பு 1 என இரு வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை மூலம்  தகுதியானவர்கள் இச்சேவைக்கு உள்வாங்கப்படுவார்கள். தற்போது சேவையிலுள்ள ஆசிரிய ஆலோசகர்களுக்கு அவர்களது சேவைக்காலத்திற்கு உரிய புள்ளிகள் வழங்கப்பட்டு முறைப்படி இசசேவைக்குள் தகுதியானவர்க் அந்தந்த வகுப்பினுள் உள்ளீர்க்கப்படுவார்கள்.


மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்லது மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது மாகாண பிரதம செயலாளர் அல்லது மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் ஆசிரிய ஆலோசகர் பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த சேவைப் பிரமாணக் குறிப்பு செயல்வலுப்பெறும் தினத்திலிருந்து ஆறு (06) மாத காலத்திற்குள் ஆசிரிய ஆலோசகர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு உள்ரீக்கப்படுவதற்கான விருப்பத்தை தெரிவித்தல் வேண்டும்.விருப்பத்தை தெரிவிப்பதற்குரிய விண்ணப்பப் படிவத்துடனான அறிவித்தலொன்று இந்த சேவைப் பிரமாணக்குறிப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பினனர்  கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் ..

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.