நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
6 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை முன்னர் போன்று இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாவதனால், இன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடுமுழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் காரியாலயங்கள் மற்றுமு; உப அஞ்சல் காரியாலயங்கள் என்பன எதிர்வரும் 6 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் 24 மணிநேர விசேட வீதித் தடை சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவுறுத்தல் அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்த, வீட்டிலிருந்தும், தங்குமிடங்களில் இருந்தும் வெளியேறுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது
No comments:
Post a Comment