அரச நிர்வாக சேவை தெரிவில் தமிழர்களிற்கு இடமில்லை! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, February 10, 2021

அரச நிர்வாக சேவை தெரிவில் தமிழர்களிற்கு இடமில்லை!


இலங்கை அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் தமிழ்மொழி பேசும் எவரும் உள்ளீர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளில் இந்த பரீட்சைகளில் தமிழ் மொழி பேசுவோரே அதிகளவில் தெரிவாகியிருந்தனர். இந் நிலையில், இந்த முறை எவரும் தெரிவாகாதது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை தரம் 3 இல் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் 2019ஆம் ஆண்டு இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதில் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளதில் 68 பேர் தெரிவாகியுள்ள அனைவருமே சிங்களவர்கள்தான் என்றும் தமிழ் மொழி பேசும் எவரும் அதில் தெரிவானதாக அறிவிக்கப்படவில்லை.

2017 ஆம் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை தரம் 3 இற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 61 பேரில் 1/4 பங்கிற்கு மேற்ப்பட்ட தமிழர்களும் அதில் முதலாவது இரண்டாவது தரத்தில் சித்தியடைந்தவர்களும் தமிழர்களாகவே இருந்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் பல தரப்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.