ஹங்கேரியில் அரசுக்கு எதிராக குழப்பநிலை... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, September 8, 2020

ஹங்கேரியில் அரசுக்கு எதிராக குழப்பநிலை...

                                     

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் பல்கலைக்கழகமொன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோரால் தலைநகர் Budapest இல் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைத்துறையைச் சேர்ந்த குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமானால் பல்கலைக்கழகத்தின் சுய நிர்வாக அதிகாரம் பறிக்கப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்கலைக்கழகமானது அரசாங்கத்தின் அனுமதியுடன் தனியார்மயமாக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஹங்கேரி அரசாங்கம் மறுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.