கல்முனை வாக்களிப்புநிலையங்களில் தொற்றுநீக்கல் புகைவிசிறும்செயற்பாடுகள்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, August 4, 2020

கல்முனை வாக்களிப்புநிலையங்களில் தொற்றுநீக்கல் புகைவிசிறும்செயற்பாடுகள்...

நடைபெறவிருக்கும் இலங்கையின் 9வது பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காகப் பயன்படுத்தபடவிருக்கும் கல்முனைப் பிராந்திய சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் புகைவிசிறப்பட்டது.

கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் குண.சுகுணனின் ஏற்பாட்டில்  சகல சுகாதார வைத்திய பிரிவுகளிலுமுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களிலும் நேற்றுக்காலை புகை விசிறப்பட்டது.

இன்று தொற்றுநீக்கல் பணிகள் சகல வாக்களிப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனாத் தடுப்பு சுகாதார விதிமுறைகள் முறையாகப்பின் பற்றப்பட்டு வாக்காளர்கள் கொரோனா அச்சமின்றி சமுக இடைவெளியைப் பேணி முகக்கவசத்துடன் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்வதே இதன்நோக்கமாகும் என பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

இங்கு கல்முனை வாக்களிப்பு நிலையங்களில் சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் பி.கணேஸ்வரன் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு சகிதம் புகைவிசிறப்படுவதைக் காணலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.