பின்தங்கிய கண்ணகி கிராம தமிழ்வித்தியாலயத்திற்கு சுகாதாரஉபகரணங்கள்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Sunday, July 5, 2020

பின்தங்கிய கண்ணகி கிராம தமிழ்வித்தியாலயத்திற்கு சுகாதாரஉபகரணங்கள்!

திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கண்ணகிகராம தமிழ்மகாவித்தியாலயத்திற்கு அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தினர் ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதியை நேற்று வழங்கிவைத்தது.

பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம் பின்தங்கிய 40 பாடசாலைகளுக்கு ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதிகளை வழங்கிவருவது தெரிந்ததே.

நீண்ட கொரோனா விடுமுறைக்குப்பின் திறபடும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சுகாதார பாதுகாப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் செயற்றிட்டத்தின் இரண்டாவது நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கண்ணகி கிராம தமிழ் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.இராஜநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சோ.சுரநுதன் நிதியத்தின் பிரதிநிதியும் வலயக்கல்விப்பணிமனை பிரதிநிதியுமாகிய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

முகக்கவசங்கள் கையுறைகள் டிஜிடல் உடல்வெப்பமானி கிருமிநாசினி தெளிக்கும்கருவி மேந்தலை எறியி புறொஜெக்டர் வெண்தாள்கள் உள்ளிட்ட தொகுதி பாடசாலைக்கு அன்பளிப்புச்செய்யப்பட்டது.

கலந்துகொண்ட ஆசிரியர் பெற்றோர்களுக்கு பாடசாலையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் வீட்டுநடைமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.