இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதை பொருள் மீட்பு...... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, July 3, 2020

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதை பொருள் மீட்பு......

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதை பொருளை வாகனத்தில் கடத்தி சென்ற நபரை பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.வல்வெட்டித்துறை, குச்சன் ஒழுங்கையைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதிக்கு ஹயஸ் ரக வேன் ஒன்றில் ஐஸ் போதை பொருளை கடத்தி செல்வதாக பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வாகனத்தை மடக்கிய அதிரடிப் படையினர், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.குறித்த போதைப்பொருள் இரு பொதிகளாக பொதி செய்யப்பட்ட நிலையில், சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளடன் , மீட்கப்பட்ட போதைப் பொருளையும், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக விசாரணைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் இனறையதினம் (02) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.லொறிக்குள் சூட்சுமமாக 201 கிலோகிராம் கஞ்சா; பருத்தித்துறை நபர் கைது
வவுனியா, பறையன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகாடு பகுதியில் ரூபா 2 கோடி பெறுமதியான 201 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) காலை 7.10 மணியளவில் மதவாச்சி - மன்னார் வீதியில் வைத்து குறித்த கஞ்சா தொகுதியை மீட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், லொறியொன்றிற்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.