பன்னலை மற்றும் கடவத்தை பகுதிகளில் இடம்பெற்றுள்ள இருவேறு கொலைச் சம்பவங்கள் இருவர் பலி.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, July 3, 2020

பன்னலை மற்றும் கடவத்தை பகுதிகளில் இடம்பெற்றுள்ள இருவேறு கொலைச் சம்பவங்கள் இருவர் பலி..

பன்னலை மற்றும் கடவத்தை பகுதிகளில் இடம்பெற்றுள்ள இருவேறு கொலைச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பன்னலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்பல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குடும்பத் தகராறு காரணமாக கணவர், மனைவியை பொல்லால் தாக்கியுள்ளார்.

இதில் அதேயிடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கொலைச் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்யும் வகையில் பன்னலை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மங்கட வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காக விரிவான விசாரணைகளை கடவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.