கடைகளில் இனி இப்படியும் ஒரு நடவடிக்கையா…….. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 18, 2020

கடைகளில் இனி இப்படியும் ஒரு நடவடிக்கையா……..



இனிவரும் காலங்களில் கடைகள்,வங்கிகள் போன்ற இடங்களில் மக்கள் வருவதை தடுக்க முடியாது.இந்த நிலையில்,பிரிட்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி,சமூக இடைவெளியை உறுதி செய்ய,ஒரு பழைய தொழில்நுட்பத்தை,புதிய கோணத்தில் பயன்படுத்தியிருக்கிறது.

கடை வாசலில்,'உள்ளே வரலாம்' என்ற பச்சை விளக்கு மற்றும் 'உள்ளே வராதீர்' என்ற சிவப்பு விளக்கு கொண்ட தானியங்கி அறிவிப்பு கருவியை பொருத்தியுள்ளது.இந்தக் கருவி,கடைக்குள், ஒரே சமயத்தில் எத்தனை பேர் வரலாம் என்பதை எண்ணி உள்ளே விடுகிறது.உள்ளே சென்றோர் வெளியேறிய பின்,அதை உணரிகள் மூலம் அறிந்து,அடுத்து அடுத்து ஐந்தாறு பேரை உள்ளே விடுகிறது.

இது வங்கிகளில்,'டோக்கன்'தரும் முறையை ஒத்திருந்தாலும்,நுழை வாயிலிலேயே இதை பொருத்துவதால்,சமூக இடைவெளியை கடைகள்,வங்கிகள் போன்ற இடங்களில் உறுதிசெய்ய முடியும்.
இந்த சமூக இடைவெளியை பேணும் கருவியை உபயோகிப்பதில் பல நாடுகள் ஆர்வம் காட்டிவருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.