குவைத்தில் இலங்கையர் மூவர் கொரோனாவிற்கு பலி - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 27, 2020

குவைத்தில் இலங்கையர் மூவர் கொரோனாவிற்கு பலி

குவைத்தில் தொழில்புரிந்துவந்த மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை குவைத் -ஸ்ரீலங்கா ஒன்றியத்தின் இணைப்பாளரான நிசாந்த சஞ்ஜீவ மடபாத்த வெளியிட்டுள்ளார்.

குவைத்தில் பர்வானியா, அஹமதி, ஹவாலி, ஜஹாரா ஆகிய நகரங்களில் தொழில்புரிந்து வரும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் பலர் சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதாக கூறும் அவர், வீசா வைத்துக்கொண்டு குவைத்தில் தொழில்புரிந்துவரும் இலங்கையர்கள் பலர் வாடகை வாகன சாரதிகளாக தொழில்புரிந்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.

இந் நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.