இரண்டு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகளினது மின்சார பாவனையாளர்களுக்கு அதன் கட்டணத்தை செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுக்காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார பாவனையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த யோசனைகளை அமைச்சரவையில் முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய, இரண்டு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகளினது மின்சார பாவனையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு சலுகை காலம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அது வரையில் மின்துண்டிப்பு செய்யாதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட சினிமா திரையரங்குகளில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான மின் கட்டணப்பட்டியலை அதன் சமமான 12 மாத தவணைகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களுக்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வருடத்தின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையான மின்கட்டணப்பட்டியலை 12 மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment