பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று தனது 74 ஆவது வயதில் காலமானார். ஆஞ்சநேயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய இவர், ஆறு, சின்னா மற்றும் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கொண்டிருந்தார்.
ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment