லெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, August 5, 2020

லெபனான் வெடிவிபத்து.. பலியான மக்கள்.. வெடிவிபத்திற்கு இதுதான் காரணமாம்.. அதிர்ச்சி காட்சி!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த நாளில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கொடூர வெடிவிபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, பெய்ரூட் நகரையே உருகுலைய செய்திருக்கும் இந்த மோசமான வெடிவிபத்து எப்படி நடந்தது என அந்நாட்டின் பிரதமர் லெபனான் பிரதமர் ஹசன் டியப் விளக்கமளித்துள்ளார்.

வெடிவிபத்து நடந்த துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேதிப்பொருள் எதிர்பாராத விதமாக வெடித்ததில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை எனவும் லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.