இலங்கையில் 2 கோடி சொத்து… கணவனுக்கு 15 கோடி சொத்து! அசிலாவைப் பற்றி வெளிவரும் புதிய தகவல்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, July 9, 2020

இலங்கையில் 2 கோடி சொத்து… கணவனுக்கு 15 கோடி சொத்து! அசிலாவைப் பற்றி வெளிவரும் புதிய தகவல்!

தஞ்சாவூரில் கடந்த மாதம் 25-ஆம் திகதி பிற்பகல் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் யூசுப் என்ற பைனான்ஸ் அதிபர் சென்றுகொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த கூலிப்படையினர் அவரை அரிவாளால் ஓட ஓட வி ரட்டி கொ லை செ ய்தனர்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், யூசுப்பை கொ லை செய்வதற்கு அவரின் மனைவியான அசிலா கூலிப்படை ஏவியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அசிலாவை கைது செய்த பொலிசார் திருச்சி மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கூலிப்படையினரான சகாதேவன், பிரகாஷ், கேசவன், சந்துரு உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், குவைத்தில் வேலை பார்த்து வந்த போது, ஜோசப், இலங்கையை சேர்ந்த அசிலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜோசப் தனக்கு திருமணம் ஆகியிருந்த நிலையில், யூசப் என பெயர் மாற்றிக் கொண்டு அசிலாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
குவைத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகர் மற்றும் பல பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்தனர். அபார்ட்மென்ட் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டனர். அத்துடன் விவசாயப் பன்ணை மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளனர்.

தற்போது அசிலாவின் பெயரில் இலங்கையில் இரண்டரை கோடிக்கான சொத்தும், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் யூசுப் பெயரில் 15 கோடிக்கான சொத்தும் உள்ளது. தமிழகத்தில் அசிலா சொத்துக்களை கவனித்துக் கொள்ள, யூசப் வேலைக்காக அவ்வப்போது குவைத் சென்று வந்தார்.அப்போது அசிலாவின் நடத்தையில் யூசப்புக்க்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அசிலா தனது அபார்ட்மென்டில் வாடகைக்கு குடியிருந்த திருச்சி சிறையில் காவலராக இருந்த செந்தில்குமார் என்பவரின் உதவியுடன் விளார் சாலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் யூசுப் வைத்திருந்த நகை, பணம், சொத்துப் பத்திரம் உள்ளிட்டவற்றை வங்கி மேனேஜரின் உதவியுடன் உடைத்து எடுத்துவிட்டார்.

இதுதொடர்பாக, யூசுப் 2018-ஆம் ஆண்டு அசிலா, பொலிசார் செந்தில்குமார், வங்கி மேனேஜர் ஆகியோர் மீது தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், அசிலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அசிலா திருச்சிக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. யூசுப், அசிலாவுக்கு சொத்துக்களைத் தர முடியாது என்றும் கூறிவிட்டார். மேலும் பல பெண்களுடன் யூசுப்புக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையும் அசிலா க ண்டித்துள்ளார். இந்நிலையில்தான் கூலிப்படையை ஏவி, யூசுப்பை கொ லை செ ய்ததாக விசாரணையில் கூறினார்.

மேலும், அசிலாவுக்கும் மயிலாடுதுறை சிறையில் சிறைக் காவலராக இருக்கும் செந்தில்குமாருக்கும் தொடர்பு இருந்துள்ளது. ஒருமுறை அசிலாவை யூசுப் அடித்துள்ளார். அப்போது செந்தில்குமார் அவர்களுடைய அபார்ட்மென்டில் குடியிருந்துள்ளார். சண்டையில் அடிதாங்க முடியாமல் செந்தில்குமாரின் வீட்டில் அசிலா ஓர் இரவு தங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது யூசுப், தனது மனைவியுடன் பழகுவது குறித்து செந்தில் குமாரைக்   கண்டித்ததுடன், பொலிசில் புகாரும் அளித்துள்ளார்.

அசிலா திருச்சிக்குச் சென்ற பிறகும் இருவருக்கும் தொடர்பு இருந்தது. அசிலாவுக்கு மேலும் சில ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாகவே யூசுப்பை கொலை செய்யத் திட்டம் வகுத்துள்ளார். இந்தக் கொ லைக்கு சிறைக் காவலர் செந்திகுமார் மற்றும் திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் குமாஸ்தா என இருவரும் உதவி செய்துள்ளனர்.

துவக்கத்தில், செந்தில்குமார் மற்றும் குமாஸ்தாவிடமும் பொலிசார் விசாரணை நடத்தினர். குமாஸ்தா மன்னார்குடி அ.தி.மு.க புள்ளி ஒருவருக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. அவர் அழுத்தம் கொடுத்ததால், இருவரையுமே இந்தக் கொ லை வ ழக்கில் பொலிசார் சேர்க்கவில்லையாம். ஆனால், பொலிஸ் தரப்போ இதை மறுக்கிறது. அசிலாவிடம் செந்தில்குமார் பணம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை திரும்ப வாங்கிக் கொடுக்கும்படி கடந்த மாதம் அவர் மீது தஞ்சை மாவட்ட காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாகத்தான் செந்தில்குமார் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அவரைத் தேவையில்லாமல் இந்தக் கொ லையில் தொடர்புபடுத்தி சிலர் கூறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.