08 மாத குழந்தை மீது அவரது சித்தியே சுடு நீர் வீச்சு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 15, 2020

08 மாத குழந்தை மீது அவரது சித்தியே சுடு நீர் வீச்சு...

08 மாத குழந்தை மீது அவரது சித்தியே சுடு நீர் ஊற்றிய சம்பவம் ஒன்று பொத்தல-மஹிமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதுடன் சம்பத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் 17 வயதான சிறுமி ஒருவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 08 மாத பச்சிளம் குழந்தையை காலி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

பொத்தல-மஹிமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த குழந்தையின் தந்தை, தாய் ,சித்தி மற்றும் அவரது பெற்றோர்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

தேனீர் தயாரிப்பதற்காக நீரை சூடாக்குவதற்கு அடுப்பில் வைத்து விட்டு இந்த குழந்தையின் சித்தியாகிய 17 வயது சிறுமி நடனமாடி கொண்டிருக்கையில் அவர் அறியாமல் கைப்பட்டு சுடு நீர் போத்தல் சிதறியதாகவும் அதில் இருந்து வெளியேறிய நீர் இந்த குழந்தையின் மீது பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.