யாழ்ப்பாணம் புலோலி அ.மி.த.க பாடசாலையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அப் பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வழமை போன்று நேற்று இரவு கடமைக்கு வந்த நிலையிலையே குறித்த நபர் இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments:
Post a Comment