தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய தாம் அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் நிறைவடைந்த தமது மகளுடன் நேற்று முனதினம் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சென்றிருந்தார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் பணிக்குழு உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்ததுடன் அங்குள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் தலையீட்டுடன் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு வளாகம் முழுமையாக தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் மகள் வெளிநாடு சென்று அண்மையில் நாடு திரும்பியிருந்ததுடன் 14 நாட்கள் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையுடன் அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமை காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வீட்டிற்கு செல்ல தயாராகியிருந்தனர்.
எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வழியில் யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றில் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தமது மகளுடன் ராஜகிரியவிலுள்ள ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தார்.
இதனையடுத்து அவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிக்குழு உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தாம் பயணித்த வாகனம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment