20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 20, 2020

20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது..

உத்தேசிக்கப்பட்ட படி எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

குறித்த தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்சமயம் உயர்நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது உசிதமானதல்லவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் அவர் மன்றுரைத்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.