தெலுங்கானா மாநிலத்தில் கணவர் தன்னை கொடூரமாக தாக்கியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த தாக்குதல் வீடியோவை பெண்ணின் பெற்றோர் வெளியிட்டனர். அதில் செல்லப்பிராணி தாக்குதலை தடுக்க முயற்சி செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ரல்லாகுவா பகுதியை சேர்ந்த லாவண்யா லஹாரி. இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவருக்கு தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்து வரும் வெங்கடேஷ்வரளூ என்பவருக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்ட லாவண்யா தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக பதிவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment