தமிழர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள் எம்மை சிதைக்க சதிவேலைகள் அம்பாறையில் நடந்தேறுகின்றன - தவராசா கலையரசன் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 30, 2020

தமிழர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள் எம்மை சிதைக்க சதிவேலைகள் அம்பாறையில் நடந்தேறுகின்றன - தவராசா கலையரசன்

எங்களுடைய தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான் இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார் .

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சார உரையில் இக் கருத்தினை முன்வைத்தார்

மேலும் குறிப்பிடுகையில்..
எங்களுடைய தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படி இருக்கின்றோம் நாங்களும் அந்த கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டவர்கள் இன்று அந்த வழி எல்லாம் திசைமாறி எம்மை சின்னாபின்னமாகி இருப்புக்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்காக பல சதி வேலைகளை எமக்கு மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது .கட்டமைப்புள்ள சமூகமாக நாம் மாற்றியமைக்க வேண்டும்

வடகிழக்கு பிரதேசங்களில் பல கட்சிகளை , சுயேட்சை குழுக்களை களமிறக்கி இருக்கிறார்கள் . இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு அனைத்தயும் செய்தது போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டாம் என கூறியது போலவும் பல பொய்யான பிரச்சாரங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தெரியும் வட கிழக்கிலே மிகவும் பலம் பொருந்திய தமிழர்களை எவ்வாறு சின்னாபின்னமாக்கலாம் என்று அம்பாறை மாவட்டத்திலே பல போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மைச் சுற்றி திரிகின்றார்கள் எங்களை வசைபாடி இல்லாமல் செய்வதற்கு பல வழிகளைச் செய்கிறார்கள்.

நாங்கள் எங்களுடைய அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் ஒரே ஒரு தமிழ்ப் பிரதிநிதி பெறக்கூடிய சூழ்நிலை தான் இருக்கிறது அவ்வாறு அதை நாங்கள் பெறவில்லை என்றால் இந்த மாவட்டத்தில் நாங்கள் அனாதை ஆக்கப்படுவோம் . எம்மை நோக்கி வருகின்றன அநீதிகளை தட்டி கேட்கின்ற சூழ்நிலை ஏற்படாது போகும அதற்காக அணிதிரள வேண்டும். 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது வைக்கும் விமர்சனங்களை நாங்கள் தாங்குபவர்கள் நாங்கள் அதே போல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களும் நாங்கள் தான் தயவு செய்து அனைவரும் வீட்டுக்கு வாக்களித்து எமது பிரதிநிதுத்துவத்தை பாதுகாக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திலே பல பிரச்சினைகள் உள்ளது அவற்றைத் மாற்று கட்சிகள தீர்த்து கொடுத்தால் மௌனமாக இருந்திருப்போம் ஆனால் இந்தத் தடவை அல்ல இதற்கு முன்பும் கூட பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறி இருந்தது இதனை சாதகமாக்கிக் கொண்டார்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுகிறார்கள் என்ற எண்ணப் பாடுகளை தோற்றுவித்தார்கள். அவ்வாறு இந்த மக்களையும் பயன்படுத்தியது இந்த அரசு ஆனால் எதுவுமே செய்யவில்லை.

மக்களையும் எங்களையும் ஏமாற்றுகின்ற விடையத்தை பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள் உண்மையிலே எங்கள் மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பல பிரச்சினைகள் நடந்து இருக்கின்றது. தற்காலத்தில் அது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. 

நாங்கள் எமது மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில பிழையான வழியில் செல்லும் இளைஞர்களை பெரியோர்கள் அறிவுரைகளை கூறி நம்மை பாதுகாத்துக் கொள்ள கூடிய வழிமுறைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிழையான வழியில் செல்வதால் எதிர்காலத்தில் நிலையான தீர்வை பெறுமா என்ற கேள்விகளைக் கேளுங்கள் என குறிப்பிட்டார்.   

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.