இலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 21, 2020

இலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில், 15 பேர் அண்மையில் டுபாயில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கடற்படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய 15 பேரும் கிரிகம தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். குறித்த 15 பேரும் அண்மையில் டுபாயில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 1047 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 604 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

434 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.