கல்முனை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 1, 2020

கல்முனை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரு கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக நற்பிட்டிமுனை -1, கல்முனைக்குடி-5 இரு பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளும் இன்று வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இவ்வீடுகள் கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விரு வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.இவ்வீடுகள் கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் இரு வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் தலா ஒரு வீட்டிற்கு ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நடப்பட்டு இவ் வீடுகள் இரு பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.நிரந்தர வீடில்லாத வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடு குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.சுபசிங்க கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ. எல்.எம் பதுரூத்தீன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை உதவி பொறியியலாளர் பாஹீம் மற்றும் நிரோசன் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.