ஹெரோயினுடன் மூன்று பெண்கள் கைது ... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 8, 2020

ஹெரோயினுடன் மூன்று பெண்கள் கைது ...

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டஅத பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (08) மாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து 52 கிராம் 615 மில்லிகிராம் ஹெரோயின், 9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டக்கள் 2, மெகசின் ஒன்று, செட்லைட் தொலைபேசி ஒன்று மற்றும் 4 கையக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

32, 28 மற்றும் 33 வயதுடைய பெண்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.