தலங்கமை காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான நிமல் ஆர் பீரிஸ் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று அவர் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு விடுக்கப்பட்டது.
7 ஆயிரத்து 564 கடிதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 460 ரூபா கட்டணத்தை அஞ்சல் திணைக்களத்திற்கு செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment