டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாரிய சிரமதானம் - நாவிதன்வெளி பிரதேச செயலகம்..... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 19, 2020

டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாரிய சிரமதானம் - நாவிதன்வெளி பிரதேச செயலகம்.....




கொரோனா அனர்த்தம் காரணமாக பின்னடைந்துள்ள  அரச நிறுவனங்கள் தற்போது வழமையான செயற்பாடுகளை ஆரம்பித்து வருகின்றன.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் வழமைக்கு திரும்பியதுடன் வெள்ளிக்கிழமை(18) காலை  டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாரிய சிரமதானத்தை முன்னெடுத்தது.

இதன் போது இன்று காலை குறித்த பிரதேச செயலகத்தில் உள்ள திட்டமிடல் பிரிவு நிர்வாக பிரிவு சமூர்த்தி பிரிவு காணிப்பிரிவு  சமூக சேவை பெண்கள் மகளீர் அபிவிருத்தி பிரிவு கணக்கு பிரிவு கிராம அபிவிருத்தி பிரிவு மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து குறித்த சிரமதானத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக உரிய பராமரிப்பின்றி காணப்பட்ட பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழலில் தேங்கி கிடந்த திண்மக்கழிவுகள் காடுமண்டிக்கிடந்த பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டு எரியூட்டப்பட்டன.


மேலும் குறித்த சிரமதான நிகழ்வானது  நாவிதன்வெளி  பிரதேச செயலாளர்  எஸ.ரங்கநாதன்  வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்  நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன்  சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம்    மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்   பங்குபற்றலுடன்   சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.