ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 22, 2020

ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு...

இன்றைய தினம் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுது. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பான மனுத்தாக்கலை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதன்போது, கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த மனுவை ஜூலை மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம், மனுவின் பிரதிவாதிகளான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோரை மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.