காணிப்பிரிப்பு - அம்பாறை அரச அதிபர்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 5, 2020

காணிப்பிரிப்பு - அம்பாறை அரச அதிபர்!




மண் பரிசோதனை அறிக்கை வந்ததும் காணிப்பிரிப்பு இடம்பெறும்!

எனஅம்பாறை அரச அதிபர் பண்டாரநாயக்க கனகர் கிராம மக்களின் 650வதுநாள் போராட்டம் தொடர்பாக அறிவித்துள்ளார்


போராட்டம் நடாத்திவரும் பொத்துவில் கனகர் கிராமமக்களின் காணிகள் எல்லையிடப்பட்டு மண்பரிசோதனைக்கான மாதிரி கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டது. கொரோனா காரணமாக அதன் அறிக்கை தாமதமாகியுள்ளது. அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மக்களுக்கான காணிப்பிரிப்பு இடம்பெறும்.


இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தன்னைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு வினவிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் பிரபல சமுகசெயற்பாட்டாளருமாகிய செல்வராஜா கணேசானந்தத்திடம் தெரிவித்தார்.


பொத்துவில் ஊறணி 40ஆம் கட்டை கனகர் கிராமமக்களின் காணிவிடுவிப்பு தொடர் போராட்டம் நேற்றுடன் 650நாட்களை பூர்த்திசெய்கிறது.


அதனைப் பார்வையிட வேட்பாளர் எஸ்.கணேசானந்தம் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் த.அ.கட்சியின் வாலிபரணி துணைச்செயலாளர் இளம்சட்டத்தரணி அருள்.நிதான்சன் உள்ளிட்ட குழுவினர் நேற்று அங்கு விஜயம்செய்தனர்.


பொத்துவில் கனகர்கிராம மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக போராட்டக்களத்தில் நின்று வேட்பாளர் கணேஸ் தொலைபேசி மூலம் அரசாங்கஅதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.


கொரோனவுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக போராட்டம் நடாத்திவரும் மக்களைச் சந்தித்து சமகாலநிலைமையை கேட்டறிந்தனர்.


போராட்டக்குழுத்தலைவி பி.றங்கத்தனா கூறுகையில்: கடந்த 650நாட்களாக பலஇன்னல்கள் வேதனைகளுக்கு மத்தியில் இப்போராட்டத்தை இறுதிபலன்கிடைக்கும்வரை முன்னெடுத்து வருகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.