மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று புதிதாக 277 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 270 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள்.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,247ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1,573 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. எனவே மரண எண்ணிக்கை 115 என்பதில் மாற்றமில்லை.
நிலைமை இவ்வாறிருக்க மலேசியாவில் இவ்வாண்டில் மட்டும் வேலையில்லா பிரச்சினை 42 வீதமாக காணப்படுவதுடன் பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவு கண்டுள்ளது நிலைமை இவ்வாறு தொடர்ந்தாள் எதிர்காலத்தில் 50 தொடக்கம் 75 வீதமாக இதை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
கடந்த 1997ல் தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்கொண்ட பொருளாதார மந்த நிலையின்போது இருந்ததைவிட தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கக் கூடும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment