வன்னியில் மொத்தமாக 12 ஆயிரத்து 709 தகுதியான தபால் வாக்குகள்.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 30, 2020

வன்னியில் மொத்தமாக 12 ஆயிரத்து 709 தகுதியான தபால் வாக்குகள்....


தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வெளியிடுதல் மற்றும் அவற்றை அஞ்சலுக்காக கையளித்தல் ஆகிய பணிகள் ஜூன் 30 மற்றும் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்ததையடுத்து வன்னி தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள தபால் வாக்காளர்களின் பெயர்பட்டியலை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதுடன்

தபால் மூல வாக்குசீட்டுகளை வினியோகிக்கும் பணி நேற்றிலிருந்து முன்னெடுக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவித்திருந்தன.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5132 தபால்வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 4196,விண்ணப்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3381 விண்ணப்பங்களுமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 12709 தபால் மூலமான வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.