இலங்கையில் கஞ்சா பயிரிட வேண்டும் தேரர் வலியுறுத்தல்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, January 19, 2021

இலங்கையில் கஞ்சா பயிரிட வேண்டும் தேரர் வலியுறுத்தல்..


 இலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ஆயுர்வேத திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இராஜாங்க அமைச்சரிடம் தேரர் இந்த கோரிக்கையை நேரடியாக முன்வைத்திருந்தார்.

அத்தோடு வௌ்ளைக்காரர்கள் அனுமதி இன்றி கஞ்சா பயிரிடவும் பயன்படுத்தவும் முடியாது என்றே தடை விதித்திருந்ததாக நாலக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் 1984ம் ஆண்டு எந்தவொரு முறையிலும் கஞ்சாவை பயன்படுத்தக் கூடாதென சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தேரர் கேள்வி எழுப்பினார்.

கஞ்சா என்பது மருந்து பொருள் எனவும் புத்த பெருமான் இதனை மருந்து பொருளாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறிய அவர், ஏன் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு எதிர்காலத்தில் இந்த மருந்தை பயன்படுத்தி நோயாளர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த தேரர் , உள்நாட்டு மருந்துக்கு தேவையான கஞ்சாவை பயிரிட அனுமதி அளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.