இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது
இதன்போது புதிய அரசியலமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment