கிரிந்த நகரில் வீதித்தடைக்கருகாமையில் போக்கு வரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது டிப்பர் மோதியதில் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் பொலிஸார் மீது மோதிய டிப்பர் வண்டியின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இதன்போது காயமடைந்த மேலும் 02 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹக்மன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே விபத்தில் உயிரிழந்தவராவார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment