திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேக சடங்கு பற்றிய அறிவித்தல் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 9, 2020

திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேக சடங்கு பற்றிய அறிவித்தல்

திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேக சடங்கு / கிரியைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளுடனான சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சம்பந்தமான பொதுமக்களுக்கான அறிவித்தல்.

கிழக்கிலங்கையில் அற்புதச்சிறப்புடன் விளங்கும் ஆலயமான திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தின் சங்காபிஷேக சடங்கு /கிரியைகள் எதிர்வரும் 10.06.2020 அன்று மு.ப. 8.30 - பி.ப. 2.00 மணி வரை மேற்கொள்வது தொடர்பாக திருக்கோவில பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 09.06.2020 காலை 11.30 மணிக்கு நடைபெற்ற கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தீர்மானங்கள்:
  1. இவ்வருட சங்காபிஷேக சடங்குகளின்போது பொதுமக்கள் பங்குகொள்ளுமL எந்த ஒரு நிகழ்வும் இடம்பெற மாட்டாது.
  2. பாற்குட பவனியானது மட்டுப்படுத்தப்பட்ட 15 - 20 பேர் வரை சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சகலகலை அம்மன் ஆலயம் வரை செல்ல அனுமதிக்கப்படுவதுடன் நேர்த்தியை நிறைவேற்றியவுடன் ஆலய வளாகத்திலிருந்து ஒன்றுகூடாமல் வெளியேறல் வேண்டும்.
  3. பாற்குட பவனியானது காலை 8.30 மணிக்கு திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியினூடாக சென்று சகலகலை அம்மன் ஆலயத்தினைச் சென்றடையும்
  4. பூசை நிகழ்வுகளில் (சங்காபிஷேகம்) ஆலயநிர்வாகம் உட்பட 15 பேர் கலந்துகொள்ள முடியும்.
  5. அன்னதான நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கப்படவில்லை
  6. ஆலய சங்காபிஷேக நிகழ்வுகள் அனைத்தும் பி.ப. 2.00 மணியளவில் நிறைவு பெறும்.

முக்கிய குறிப்பு
  1. வழமை போல் நடைபெறுகின்ற கடைகள் மற்றும் வேறு வியாபார நிலையங்கள் எதுவும் ஆலய வளாகத ;திற்குள்ளேயும் வெளியேயும் நடாத்த அனுமதிக்கப்படவில்லை.
  2. குறித்த காலப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பிரதேச சபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
  3. இந்நிகழ்வுகள் அனைத்திலும் சுகாதார முறையிலான முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் கட்டாயமானதாகும்.
  4. மேற்குறித்த தீர்மானங்கள் யாவும் அரசாங்கத்தால் விடுக்கப்படும் மாற்றங்களுக்கேற்ப மாற்றப்படலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.


இந்த கட்டுப்பாடுகளானது எமது பிரதேச மக்களை COVID - 19 தொற்று ஏற்படாமல் காப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.




தகவல் : COVID - 19 தடுப்பு செயலணிக்குழு, திருக்கோவில்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.