கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயம்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 1, 2020

கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயம்..



கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட தாளவட்டுவான் சந்தியில் புதன்கிழமை(1) முற்பகல் இடம்பெற்றது.

மருதமுனை பகுதியில் இருந்து நற்பிட்டிமுனை பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த கனரக வாகனமும் நற்பிட்டிமுனை பகுதியில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இதன் போது குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை போக்குவரத்து பொலிஸார் விபத்த தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.