திருக்கோவில் ஆடீஅமாவாசை தீர்த்தோற்சவம் . அன்னதானம் கடைத்தெரு களியாட்டங்களுக்கு தடை! 50பேர் அனுமதி! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 26, 2020

திருக்கோவில் ஆடீஅமாவாசை தீர்த்தோற்சவம் . அன்னதானம் கடைத்தெரு களியாட்டங்களுக்கு தடை! 50பேர் அனுமதி!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை மகோற்சவம் வழமைப்பிரகாரம் நடைபெறவுள்ளது.

ஆனால் இம்முறை கொரோனா நிலைமையின்காரணமாக அன்னதானம் வழங்கல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் கடைத்தெரு வைக்கவும் களியாட்டங்கள் நடாத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு 50பேர் பூஜைவேளையில் கலந்து கொள்ளலாம் என ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

இம்மகோற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் திங்கட்கிழமை நண்பகல் 12மணிக்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மென்டிஸ்அப்பு பிரசாத் திணைக்களத்தலைவர்கள் படையினர் பொலிசார் மற்றும் ஆலய நிருவாகிகள் கலந்துகொண்ட இககூட்டத்தில் சமகால கொரோனா நெருக்கடி காரணமாக உற்சவத்தை எவ்வாறு நடாத்துவது என்று முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை ஆடிவேல் உற்சவம் யூலை மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி யூலை மாதம் 20ஆம் திகதி நிறைவடையவிருக்கிறது. 18தினங்கள் அபிசேகபூஜைகள் இடம்பெறும். பிதிர்க்கடன் செலுத்தும் தீர்த்தோற்சவ பூஜை 20ஆம் திகதி நடைபெறும் என ஆலயதலைவர் சு.சுரேஸ் மேலும் தெரிவித்தார்.

யூலை மாதம் 01ஆம் திகதி வாஸ்துசாந்தியும் மறூநாள் யூலை 02ஆம் திகதி கும்பாபிசேக சங்காபிசேகமும் இடம்பெறும். தீர்த்தம் நிறைவுற்றதும் 21ஆம் திகதி பூங்காவனத்திருவிழாவும் 22ஆம் திகதி வைபரவர் பூஜையும் இடம்பெறும்.

இம்முறை ஆலயத்திற்கான விசேட பஸ்சேவை இடம்பெறாது. பக்தர்களைக்குறைக்கும் நோக்கத்துடன் பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

வேட்டைத்திருவிழாவிற்கான ஊர்வலமும் ஆக 50பேர் கலந்துகொள்ளத்தக்கதாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளுக்கமைய நடைபெறவிருக்கிறது எனவும் தலைவர் சு.சுரேஸ் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 27ஆம் திகதி ஆலயத்தில் அதிகாரசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் ஆலயநிருவாகிகள் திருவிழா உபயகாரர்கள் அழைக்கப்படவுள்ளனர் கொரோனதொண்டர் சபையொன்றும் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.