கோவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 25 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 25,12,388 முறை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1,08,121 பரிசோதனைகள் நடந்துள்ளன.
சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதனை நடந்திருக்கும் என்பதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையைவிட பரிசோதனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
No comments:
Post a Comment