கடந்த மூன்று தசாப்த காலமாக இந்தியப் படைகளுக்கும் சீனப் படைகளுக்கும் இடையில் எல்லை போர் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது இரு படையினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 20க்கும் மேற்பட்ட இந்தியப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்களால் அதிகரித்துவரும் பதட்டம் நிலைமையை தொடர்ந்து கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள மோதல்களில் மிகவும் கொடிய ஒரு மோதலாக இது கருதப்படுகின்றது.
இந்த மோதல் தொடர்பாக இந்திய ராணுவம் ஆரம்பத்தில் தங்கள் தொகுப்புகளில் மூவர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பினருக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது.
இருந்தும் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment