சுமந்திரனின் பொய்யினால் 15 இளைஞர்கள் சிறையில் - கருணா அம்மான் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 15, 2020

சுமந்திரனின் பொய்யினால் 15 இளைஞர்கள் சிறையில் - கருணா அம்மான்


சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை திங்கட்கிழமை (15) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் 
சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கெள்வதில்லை அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்ந்தவர். சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்  

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களுடன் ஒப்பிடும் போது சுமந்திரன்அரசியல் கத்துக்குட்டி தான். என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.