ஆழ்துளை கிணற்றில் விழுந்த மேலும் ஒரு சிறுவன் பரிதாப மரணம்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 28, 2020

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மேலும் ஒரு சிறுவன் பரிதாப மரணம்!



இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன் என்பவரின் 3 வயது மகன் ஷாய் வர்தன்.இவர் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்ற போது, தவறுதலாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.முதலில் 25 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்ட போது, மண் சரிவு ஏற்பட்டதால், குழந்தை கீழிறங்கியது.இதனையடுத்து ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து குழந்தையை மீட்கும் பணிகள் நடந்தன.
அத்துடன் குழந்தை சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டடு பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியும் நடந்தது.எனினும் குழந்தையை மீட்க எடுத்த அனைத்து முயற்சிகளும்தோல்வியில் முடிந்த நிலையில் கிண்ற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது 

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.