கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு, மைதானத்தில் பார்வையாளர்களே இல்லாமல் தடகள போட்டிகள் நடக்கலாம் என்று உலக தடகள அமைப்பின் தலைவர் லார்ட் கோய் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள வருடாந்திர ‘டியமண்ட் லீக்’ தடகள போட்டி தொடரின் 11 போட்டிகள் மூடிய மைதானத்துக்குள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
“குறைந்தபட்ச நேரத்தில் நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். தடகள போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு இதுவே வழி. ஆனால், இதை யாரும் நீண்டகால தீர்வாக கருதவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment