பிரதான நிகழ்வுகள்
கல்முனையில் உணவுப் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநகர சபை நடவடிக்கை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் நடாத்திய கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இயங்கி வருகின்ற உணவகங்கள், சந்தைகள், மரக்கறி கடைகள், கிழங்கு பொரியல் கடைகள், மற்றும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் பேணப்படுவதன் அவசியம் குறித்து இக்கலந்துரையாடலில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் இவை அனைத்திற்கும் கல்முனை மாநகர சபையின் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெறப்பட்டிருக்க வேண்டும் எனவும் அனுமதி பத்திரங்கள் பெறாமல் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் இவற்றை உறுதி செய்யும் பொருட்டு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது எனவும் இதற்காக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.அஹ்சன். அம்பாறை மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு பரிசோதகர் முஹம்மட் தஸ்தகீர், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
- (அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்குச் செய்திகள்
-
Apr 25 , 2018
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், இரவு நேரத்தில் பயணம் செய்வோரின் நலன்கருதி அட்டாளைச்சேனை, பாலமுனை, மீனோடைக்கட்டு, எல்லைப் பிரதேசத்தில் மின்விளக்குகளைப் பொருத்துமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, பொதுமக்கள் இன்று (25) மகஜர் ஒன்றை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
-
Apr 25 , 2018
சாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நிகழ்வு இன்று (25) புதன்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள் சனூஸ் காரியப்பர், எம்.ஏ.சீ.எம்.அமீன், மஸாயா சமட், நினா இர்சாத், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளரும், சமுர்த்தி உதவி முகாமையாளருமான றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர்களான ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர் எம்.ஆதம், விவாகப் பதிவாளர் எம்.எம்.உதுமாலெவ்வை, பொருளாளரும்
-
Apr 25 , 2018
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது. தமிழ் பாரம்பரியத்தின் பழைமையை நினைவு படுத்தும் வகையில் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டதுடன், கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
-
Apr 25 , 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிறைவேற்று சபையில் நேற்று தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், ரி.பி.இலங்கரட்ன, அலவி மௌலானா போன்ற தொழில் வர்க்கத்திற்காக அளப்பெரும் சேவையாற்றிய தொழிற்சங்கத் தலைவர்களை பாராட்டும் மாநாடொன்று எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
-
Apr 25 , 2018
குறித்த போராட்டம் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் படுகாயமடைந்து நடப்பதற்கு முடியாத நிலையில் உள்ள தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி க.கிருபாகரன் என்ற ஆசிரியர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். கல்லடியை சேர்ந்த குறித்த ஆசிரியர், கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பத்து வருடமாக ஆசிரியராக கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த விபத்தில் 10 மாதங்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்துள்ளார்.
-
Apr 25 , 2018
சில காலங்களில் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும் நிலைமை இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். வாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
-
Apr 25 , 2018
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மனிதநேய செயற்பாடுகளை மிகவும் சிறப்பான முறையில் சமூகத்தில் இன, மத, மொழி பேதங்களை கடந்து மேற்கொண்டு வரும் எகெட் கரித்தாஸ் அமைப்பின் 40 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்வுகள் கடந்த (22) திருகோணமலையில் எகெட் கரித்தாஸ் அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை க.நிதிதாசன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலை இறையிரக்க திருதலத்தில் திருகோணமலை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.
இலங்கை செய்திகள்
-
Apr 25 , 2018
இம்முறை சிறுபோகம் முதல் சகல விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா காப்புறுதியொன்றை பெற்றுக் கொடுக்க போவதாக விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
-
Apr 24 , 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
-
Apr 24 , 2018
வறுமையோடு பள்ளி செல்லும் 100 மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கும் நிகழ்வானது இன்று வட மாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களுடைய மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றுள்ளது.
-
Apr 24 , 2018
தற்பொதுழுது நிலவும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கூடியவரையில் தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Apr 22 , 2018
பால்மா ஒரு கிலோவின் விலை 75 ரூபாவாலும் சமையல் வாயு சிலிண்டரொன்றின் விலை 245 ரூபாவாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
-
Apr 21 , 2018
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 185 குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சி காரணமாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 21 , 2018
இலங்கையின் தெற்கே காலி மாவட்டம் பலப்பிட்டியிலிருந்து மாத்தறை ஊடாக கிழக்கே பொத்துவில் வரையிலான கடல் பிரதேசம் இன்று இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் ஓரளவுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்தல்கள்
-
Apr 25 , 2018
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் 2018.04.26ம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில் காலை 08.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
-
Apr 25 , 2018
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் நடாத்தப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் நடாத்தப்படவுள்ளது.
-
Apr 23 , 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலாளர் தராகி சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் ஊடகவியலாளர் சண் தவராஜாவின் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் மட்டக்களப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2005ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடு நிலைய மண்டபத்தில் 28ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பல்சுவைக் கதம்பம்
-
Nov 13 , 2016
-
Nov 06 , 2016
நினைவலைகள்
-
Dec 20 , 2016
திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட "சண்முகம் கணேஸ்வரன்" அவர்கள் 18.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.
-
Dec 07 , 2016
வீரமுனையை இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட "நாகமணி வள்ளியம்மை" அவர்கள் 07.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.
-
Dec 01 , 2016
வாழ்த்துக்கள்
-
Jun 12 , 2017
வீரமுனையை சேர்ந்த நடராஜா பிரியராஜ் - பவித்ரா (கல்முனை) தம்பதியினரின் திருமணம் கடந்த 04.06.2017 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.
-
May 30 , 2017
வீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 06வது பிறந்தநாளை நேற்று (29/05/2017) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
-
Nov 28 , 2016
வீரமுனையை சேர்ந்த அருளம்பலம் சிவராஜா அவர்கள் பொன்னம்பலம் நிதர்ஷனா அவர்களுடன் 27/11/2016 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
-
Nov 23 , 2016
வீரமுனையை சேர்ந்த நிறோஜன் அனுஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருணாளினி அவர்களின் மருங்கை வைபவமானது 23/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.
-
Nov 22 , 2016
வீரமுனையை சேர்ந்த சிந்துஜா சுதேந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி தனனியா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 21/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.